என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ரெயில் சேவை மாற்றம்"
- ரெயில்வே தண்டவாள பராமரிப்பு பணி நடைபெறுவதன் காரணமாக ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
- ரெயில் கூடூரில் இருந்து மாலை 4.35 மணிக்கு புறப்படும்.
சென்னை:
சென்னை ரெயில்வே கோட்டத்தில் பல்வேறு இடங்களில் ரெயில்வே தண்டவாள பராமரிப்பு பணி நடைபெறுவதன் காரணமாக ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து விஜயவாடாவுக்கு வருகிற 17, 24, 31 ஆகிய தேதிகளில் மதியம் 2.05 மணிக்கு புறப்பட வேண்டிய பினாகினி விரைவு ரெயில் (12712) சென்னை சென்ட்ரல்- கூடூர் இடையே பகுதி ரத்து செய்யப்பட்டு உள்ளது. இந்த ரெயில் கூடூரில் இருந்து மாலை 4.35 மணிக்கு புறப்படும்.
விஜயவாடாவில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு வருகிற 17, 24, 31 ஆகிய தேதிகளில் காலை 6.10 மணிக்கு புறப்படும் பினாகினி விரைவு ரெயில் (12711), கூடூர்- சென்னை சென்ட்ரல் இடையே பகுதி ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதே போல் சென்னை சென்ட்ரல்- சாய் நகர் ஷீரடி, சென்ட்ரல்-விஜயவாடா, சென்ட்ரல்-அவுரா ரெயில் புறப்படும் நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
- விஜய்வசந்த் எம்.பி. வலியுறுத்தல்
- பண்டிகையை கொண்டாட முன்கூட்டியே சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளுக்கு இந்த ரெயில் சேவை மாற்றம் மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தும்.
நாகர்கோவில்:
தெற்கு ரெயில்வேக்கு விஜய்வசந்த் எம்.பி. அனுப்பி யுள்ள கோரிக்கையில் கூறி யிருப்பதாவது:-
தென் தமிழகத்தில் இரட்டை ரெயில்பாதை அமைக்கும் பணி நடை பெற்று வருகிறது. இந்த பணி களுக்காக அவ்வப்போது தென்மாவட்ட ரெயில் சேவையில் ரெயில்வே நிர்வாகம் சில மாற்றங்களை செய்து வருகிறது.
இந்த நிலையில் தமிழர் களின் முக்கிய பண்டிகை யான பொங்கல் திருவிழா நெருங்கி வரும் நிலையில் இரட்டை ரெயில் பாதை அமைக்கும் பணிக்காக மதுரை-கன்னியாகுமரி வழித்தடத்தில் இயக்கப்படும் ஒரு சில ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ள தோடு பல ரெயில்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகையை கொண்டாட முன்கூட்டியே சொந்த ஊர்களுக்கு செல் லும் பயணிகளுக்கு இந்த ரெயில் சேவை மாற்றம் மிகுந்த சிரமத்தை ஏற்ப டுத்தும் எனவே, இரட்டை வழிப்பாதை அமைக்க மேற்கொள்ளப்படும் ரெயில் சேவை மாற்றத்தை தள்ளி வைக்க வேண்டும்.
இதன் மூலம் பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊருக்கு செல்வோரின் பயணம் இலகுவாகும். மேலும் வர்த்தக ரீதியாக செல்லும் வணிகர்களின் நலனையும் கருத்தில் கொண்டு ரெயில் சேவை மாற்றத்தை பொங்கல் விடுமுறைக்கு பிறகு நடை முறை படுத்தவேண்டும் என வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்